தமிழ் வருடப்பிறப்பு அன்று சிவசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும். மாலை சுவாமி அலங்கார ஊர்வலம் மேலதாளத்துடன் நடைபெற்றுவருகிறது.
ஆறு படை வீடுகள்.
1. திருப்பரங்குன்றம், (மதுரைக்கு அருகில்)
2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
3. திருவாவினன் குடி (பழநி)
4. திருவேரகம் (சுவாமி மலை)
5 குன்றுதோறாடல் (திருத்தணிகை)
6. பழமுதிர்ச்சோலை (மதுரைக்கு அருகில்)
மாரியம்மன் திருவிழா
ஓம் மங்கள காரணீ ச வித்மஹே
மந்த ஹாஸினி ச தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத் - காயத்திரி
ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்திலுள்ள தெய்வங்களை வணங்கிய பின்னர், ஸ்ரீமாரியம்மன் சந்நிதியை அடைகிறோம். இந்த ஆலயம் மிகவும் பழமையானதும், மிகவும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த ஆலயமானது பழங்காலத்தில் நாட்டு ஓடு கொண்டு வேயப்பட்ட கொட்டகையில் அமைந்திருந்தது. வருடா வருடம் ஐப்பசி மாதத்தில் ஊர் பெரியதனக்காரர் மற்றும் காரியக்காரர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு முன்பே முதலில் பூவோடு வைத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். அன்று முதல் மஞ்சள் நீராடி பண்டிகை முடிவடையும் வரை பக்தர்கள் பல வேடங்கள் பூண்டு நேர்த்தி கடனை செலுத்துவதோடு மக்களையும் மகிழ்விக்கிறார்கள். பொங்கல் அன்று வண்டிவேடிக்கை நடைபெறும். வண்டி வேடிக்கையில் முதலில் வருவது பூந்தேர், பூந்தேரை அலங்கரித்து முறைப்படி பூஜை செய்து வருபவர்கள் இவ்வூரில் வாழும் அத்தனூரார் பங்காளிகள் வகையறாவினர் ஆகும்.
அதன் பின் யானை மேல் அமர்ந்து ராஜதர்பாருடன் கூடிய வேடமிட்டவர் வருவார். இவர் குழந்தைகளுக்குத் திருநீறு அணிவித்தால் குழந்தைகள் நோயற்று நலமுடன் வாழும் என்பது ஐதீகம். இவ்வாறு யானை வண்டிவேடமிடுபவர்கள் ஓலைப்பட்டியார் பங்காளி வகையறாவினர் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவின் போது சத்தாபரணம் நடைபெறுவது வழக்கம். சத்தாபரண நிகழ்ச்சிக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சிக்கும் பவானி கொமராபாளையத்தைச் சேர்ந்த சிவசக்தி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்களான சிவசக்தி கரிச்சி கே.லோகநாதன் அவரது தம்பிகளான கே.சண்முகசுந்தரம் மற்றும் கே.தனசேகரன் ஆகியோர்கள் அவர்களது சொந்த செலவில் இதுவரை நடத்திவருகின்றனர்.
இத்திருக்கோவிலுக்கு கல்மண்டபம் அமைக்க எண்ணிய நமது ஊர்மக்கள் முயற்சியாலும் ஆன்மீகச் செல்வந்தர்கள் முயற்சியாலும் கல் மண்டபம் அமைத்தனர்.07.09.1990-ம் ஆண்டு அன்றய பெரியதனக்காரர் பஞ்சாடி அவினாசி முதலியார் தலைமையில் ஆயிரம் பிறை கண்டவர் பிரதிஷ்டா ரத்தினம் V.M.குப்புசாமி குருக்களும், ஸ்ரீமது ஆதிசைவ புரந்தர பண்டித குருஸ்வாமி சிவயாக நிர்வாக செம்மல் M.சண்முகசுப்ரமணிய குருக்களும் சிவ ஆகமப்படி வேத விற்பனர்களைக் கொண்டு மிகக் சிறப்பாக குடமுழுக்கு செய்வித்தனர்.
நாம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று அனைவருக்கும் அருள் அளிக்கும் ஸ்ரீவிநாயகரை வணங்கி வழிபட வேண்டும். பின்னர் கருணையே வடிவாக அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மனை ஒரு மனதுடன் வழிபடவேண்டும். பின்பு மாரியம்மனுக்கு எதிர்புறமுள்ள சிம்மவாகனத்தை வழிபட வேண்டும். அதன் கிழபுறம் அமைந்துள்ள காமாட்சி அம்மனை வழிபட்டு ,அதன் கிழபுறம் அமைந்துள்ள ஸ்ரீமுத்துகுமாராசாமியை வணங்க வேண்டும் .பின்னர் அதன் அருகில் உள்ள இடும்பன்,கடம்பன் சுவாமிகளை வணங்க வேண்டும்.அதன் பின்னர் குறிஞ்சி மண்டபத்தை வலம் வந்து அதில் அமைந்துள்ள ஊஞ்சலை வணங்க வேண்டும். இந்த குறிஞ்சி மண்டபம், கருப்ப முதலியார் பங்காளிகள் வகையறாக்களால் அமைத்துப் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு மாரியம்மனை வணங்கிவழிபட்டு அம்மன் அருளை அனைவரும் பெறவேண்டும்.
மாரியம்மன் கோயிலுக்கு கிழக்கே செட்டி பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் வைசியர் செட்டியார் சமூகத்தினரால் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பூந்தேரைத் துவக்கிவைப்பவர் ஆண்டகளுர்கேட் திரு. ஜெகநாத ஐங்கார் அவர்கள் ஆவார்.
|