பள்ளியில் தொழிற்கல்வியின் முலம் பயன் பெற்றவர்கள்
மேல்நிலைப் பள்ளியில் 1985-86-ம் ஆண்டு முதல் 1989-90-ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகள் மேல்நிலைக் கல்வியுடன் இடைநிலை ஆசிரியர் பயிற்சியும் சிறப்பாக நடைபெற்றது. இதில் பயின்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பெற்ற மாணவிகள் இன்று பல்வேறு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியைகளாகவும்,தலைமை ஆசிரியைகளாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல் கல்பதித்தது போல் ஆகும் என்று கூறினால் மிகையாகாது.
பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்கள்.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும்/ அறிவியல் அறிஞர்களாகவும்,கணிப்பொறி வல்லுனர்களாகவும்,நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.அரசுஅலுவலர்களாகவும்,ஆசிரியர்களாகவும் பலர் பணியாற்றி வருகின்றனர். காவல் துறை ஐ.ஜி.திரு.ஆ.பழனிவேல் அவர்களும்,காவல் துறை டி.ஐ.ஜி,திரு.குமாரசாமி அவர்களும்,ஐ.ஆர்.எஸ்.அதிகாரியான சரவணக்குமார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
மாணவ-மாணவிகள் சாதனை:
1996-1997-ம் கல்வியாண்டில் மேல்நிலைத் தேர்வில் இப்பள்ளி மாணவி ரம்யா என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார்.1997-1998-ம் கல்வியாண்டில் நாமக்கல் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் இடத்தை என்.சிவராஜசேகர் என்ற மாணவரும்,மூன்றாம் இடத்தை.எஸ்.ஜெகதீஸ் என்ற மாணவரும்,நான்காம் இடத்தை பச்சியப்பன் என்ற மாணவரும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மகளிர் பள்ளியில் 2001-2002-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை ஈ.நர்மதா என்ற மாணவி பெற்று சாதனை படைத்தார்.மேலும் 2002-2003-ம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை ஜ.கீர்த்தனா என்ற மாணவி பெற்று சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் மாணவ மன்றம்
நமது பள்ளியில் முன்னாள் மாணவ மன்றம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளியின் பொன்விழா 2001-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.இதையொட்டி பள்ளியின் முன்னாள் மாணவர்மன்றம் சார்பாக ஒரு பொன்விழா கட்டிடம் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தனர். அவர்கள் அன்பளிப்பாக அளித்த நன்கொடையில் சுமார் 10.50லட்சம் மதிப்பில் கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டது.அக்கட்டிடம் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டில் அமைந்துள்ளது.
1951-ம் ஆண்டு துவக்கப்பட்ட நமது பள்ளி நிர்வாகக் குழுவானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை,செங்குந்தர் பெருமக்களால் மாறுதல் செய்யப்பட்டு வருவது வழக்கம்.
அந்த முறையில் தற்போது 16-10-2007-ம் ஆண்டு முதல் கீழ்க்கண்டவர்களை நிர்வாகக் குழுவாகக் கொண்டு நமது பள்ளி செயல்பட்டு வருகிறது.
1. திரு. மா . சண்முகம் அவர்கள் - தலைவர்.
2. திரு. அ. பழனிச்சாமி அவர்கள் - துணைத்தலைவர்.
3. திரு. மு. வடிவேல் அவர்கள் - செயலாளர்.
4. திரு. ஆ. பழனிசாமி அவர்கள் - பொருளாளர்.
5. திரு. கா. விஸ்வநாதன் அவர்கள் - உறுப்பினர்.
6. திரு. சௌ. ஞானசேகரன் அவர்கள் - உறுப்பினர்.
7. திரு. செ. லோகநாதன் அவர்கள் - பெற்றோர் ஆசிரியர் கழக பிரதிநிதி.
16-10-2007-ம் ஆண்டு பொறுப்பேற்ற பள்ளி நிர்வாகக் குழுவானது மிகுந்த முயற்சி எடுத்து பழுதான கட்டிடங்களையும், சேதமடையும் நிலையில் இருந்த கட்டிடங்களையும் எடுத்து விட்டு புதியதாகக் கட்டிடம் கட்ட தீர்மனித்தது. மேலும் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. சுமார் 30 இலட்சம் மதிப்பில் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய மாடிக்கட்டிடம் கட்ட எண்ணி, மாவட்ட ஆட்சித் தலைவரை அனுகி 50% மானியத்துடன் ரூ. 17 இலட்சம் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தில் ஐந்து வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடமும் கட்டப்பட்டது. மேலும் சேலம் ரோட்டரி சங்கத்தின் மானியத்தில் ரூ, 2 இலட்சம் மானியம் பெற்று மகளிர் உயர் நிலைப் பள்ளிக்கு 100 பெஞ்ச், டெஸ்க்கும் வாங்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.50 இலட்சம் மானியம் பெற்று 12 அறைகளைக் கொண்ட நவீன கழிப்பிடமும் கட்டப்பட்டது. மேலும் இரண்டு பள்ளிகளுக்கும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
சாதனைகள் பல படைத்தாலும் இப்பள்ளி பல சவால்களையும் எதிர்நோக்கி உள்ளது. பெருகி வரும் ஆங்கில வழி பள்ளிகளைக் கருத்தில் கொண்டு, நம் பள்ளியில் 6- மற்றும் 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கில வழிப்பாடம் துவக்கப்பட்டுள்ளது. 2008- ம் ஆண்டு மேல்நிலைத் தேர்வில் நம்பள்ளி கார்த்தி என்ற மாணவன் அரசியல் அறிவியல் பாடத்தில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது ,பள்ளி வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்க வேண்டிய ஒன்றாகும். இதுபோல இன்னும் பல சாதனைகளைப் படைத்து நமது பள்ளியானதுமாவட்டத்திலும்,மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க அளவில் பெயர் பெற பள்ளி நிர்வாகமும்,ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளனர். செங்குந்தர் சமுதாய மக்களும் சுற்று வட்டாரப் பொது மக்களும், நல்லாதரவு வழங்க அன்புடன் வேண்டுகிறோம்.
|